Wednesday, June 9, 2010

காற்றே நீயும் என்னை போல படிக்காமலே புத்தகத்தை புரட்டுகிறாய்

Friday, February 19, 2010

 
பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான
மழை.
 
ஜலதோஷம் பிடிக்கிறது…
என்றாலும்
குழந்தைக்கு
நனைவதே பிடிக்கிறது !

.
 

ஒழுகாத கூரையும்
நனையாத படுக்கையும்
பசிக்காத வயிறும்
இருந்தால்
ரசிக்க வைக்கும்
எல்லா மழையும்.



 
“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?


அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.


பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்


அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.


நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.


கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.


“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.


யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !



Wednesday, December 2, 2009

கால இயந்திரத்தின் கடும் வெயில்
கணிசமாக குறைகிறது;
பள்ளி முடிந்து வருகின்றன
பாரம் சுமக்கும் பட்டுப் பூக்கள்;
குஞ்சுகளைப் பிரிந்த பறவையினம்
கூடு தேடி வருகின்றன;
இனிய மாலைப் பொழுதை வரவேற்க
கட்டப்படும் மல்லிச் சரங்கள்;
ஆள் நடமாட்டத்தால் மீளுயிர் பெறும்
நிச்சலமாய் இருந்த தெருக்கள்;
நீலமா? பச்சையா? சிகப்பா? வெள்ளையா?
என நிறம் பிரித்தறியமுடியா வானம்;
நொடிக்கொருமுறை வானத்தில்
ஓவியங்களை அழித்து தீற்றும் காற்று;
பிரிந்தவைகள் கூடும் நேரம்,
முடியப் போகும் ஒரு காதல் நாடகம்;
நீல வண்ணக் காதலியுடன் உறவாடியதில்
மேலும் சிவக்கிறான் ஆதவன்;
காலம் செல்ல செல்ல கதிரவன் மனம் மாறுகிறான்;
கடற்காதலியோ நிறம் மாறுகிறாள்.
நீலமும் பச்சையுமாய் இருந்த கடல்ராணி
தன் கதிர்க்காதலனின் பிரிவாள் கலங்குகிறாள்.
குளிர் நீரோ!! இல்லை, கொதியுலைப் பாகோ!!
மறையும் காதலனுக்கு மாயாஜாலம் காட்டுகிறாள்.
மயங்காத மன்னவனுக்கு கொடி போதாதென
இரவையே உடுத்தி எதிர்ப்பை காட்டுகிறாள்.
மறைந்த காதலன் வரும் வேளை பார்த்து
ஏக்கத்துடன் காத்து கிடக்கிறாள்.
இயற்கையின் காதல் நாடகம் முடிய
கடற் காதலியின் வலி என்னுள் ஏற..
என்னுடன் என்னவள் இல்லா நிதர்சனம்
என் உயிரை சுண்டி இழுக்க..
ஏக்கம் மட்டும் தந்து உறக்கம் தரா
என் இரவை எதிர்நோக்கிச் செல்கிறேன்...

Sunday, November 29, 2009

முத்தத்தில்"
காதல் சொல்வதில்...
உனக்கு நிகர்
நீதான்..!
**********************************
ஏதாவது சொல்லி
உன் கை பிடிக்கத்தான்...
நான்"கைரேகை சாஸ்திரமே"
தெரிந்து கொண்டேன்....!
************************************

அழகு...!
வெள்ளை காகிதமும் இன்று
அழகாக தெரிகிறது
என் கண்களுக்கு..!
உன்னை
பற்றி எழுதும் போது..!
நீ
பேச தொடங்கியதும்...
உன் அக்காள் 'நிலவு...,'
என்னுடன்
பேசுவதை நிறுத்தி கொண்டாள்..!?
****************************************
கண்ணாமூச்சி விளையாடினாய்
குழந்தைகளோடு..
நாள் முழுவதும் நான் குருடாகி திரிந்தேன்... .!!
***************************************

நீ தனித்துவம் வாய்ந்தவள்...
மன்னிக்கவும் எதோடும்
ஒப்பிட முடியாது என்னால்..!?
****************************************
எனக்குள்ளே பட்டிமன்றம் நடக்கிறது..
நீ அழகா..இல்லை
உன் கையெழுத்து அழகா.. என்று?
**************************************

என்ன ஒரு வேதனை...
ஒரு உயிர்...
இரண்டு உடல்களில் பிரிந்து
கிடக்கிறதே..?!
*************************************
உன் பார்வை....
என் மொத்தத்தின்
நங்கூரம்..?!
***********************************

பேனா...!

என்னவளே உன்னை
வர்ணித்து எழுதிய
பேனா இப்போது
எழுத மறுக்கின்றது - எனென்றால்
உன்னை வர்ணித்து
எழுத வார்த்தைகள்
இல்லை என்பதலோ...!
பொறுமை....!
பெண்ணே!
உனக்கு இவ்வளவு
பொறுமை கூடாது! - உன்
காதல் சொல்ல
என் கல்லறைக்கா
வருவது....!
 

Thursday, November 26, 2009

உனக்காக
என்றாலே ....
இனம் புரியா சந்தோசம் ....
இருக்கிறது ..
எனக்கான வலிகளை மறந்து
என் விழியின் நீரை கடந்து
உன்னுடன் பேசுகையில்
உனக்காக பொய்யாய் சிரிப்பதில் கூடத்தான் ........
உயிரே !!!!!!