Sunday, November 29, 2009

நீ
பேச தொடங்கியதும்...
உன் அக்காள் 'நிலவு...,'
என்னுடன்
பேசுவதை நிறுத்தி கொண்டாள்..!?
****************************************
கண்ணாமூச்சி விளையாடினாய்
குழந்தைகளோடு..
நாள் முழுவதும் நான் குருடாகி திரிந்தேன்... .!!
***************************************

நீ தனித்துவம் வாய்ந்தவள்...
மன்னிக்கவும் எதோடும்
ஒப்பிட முடியாது என்னால்..!?
****************************************
எனக்குள்ளே பட்டிமன்றம் நடக்கிறது..
நீ அழகா..இல்லை
உன் கையெழுத்து அழகா.. என்று?
**************************************

என்ன ஒரு வேதனை...
ஒரு உயிர்...
இரண்டு உடல்களில் பிரிந்து
கிடக்கிறதே..?!
*************************************
உன் பார்வை....
என் மொத்தத்தின்
நங்கூரம்..?!
***********************************

பேனா...!

என்னவளே உன்னை
வர்ணித்து எழுதிய
பேனா இப்போது
எழுத மறுக்கின்றது - எனென்றால்
உன்னை வர்ணித்து
எழுத வார்த்தைகள்
இல்லை என்பதலோ...!
பொறுமை....!
பெண்ணே!
உனக்கு இவ்வளவு
பொறுமை கூடாது! - உன்
காதல் சொல்ல
என் கல்லறைக்கா
வருவது....!
 

No comments:

Post a Comment