இணையத்தில் தோழியாகி
இதயத்தில் புகுந்து விட்டாய்
நல்ல நட்பினால்
நெஞ்சத்தில் நிறைந்து விட்டாய்
பாசாங்கு இல்லை,
முகமூடி இல்லை;
வார்த்தை ஜாலங்கள் இல்லை;
வெறுப்புகள் இல்லை;
போலி வேஷமும் இல்லை;
நட்பின் இலக்கணமாய்
நாங்கள் இருக்கிறோம்;
உள்ள தூய்மையோடு
உறவாடுகிறோம்;
வர்ண தோரணை கட்டி உன்னை
வரவேற்கிறேன் என் மன கூட்டுக்குள்..
உண்மையின் நிழலாய் வருகிறேன் என்கிறாய் நீ.
வேண்டாமென சொல்வேனா என் உயிர் தோழியே!!!
Monday, November 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment